லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

Update: 2023-10-12 04:10 GMT
Live Updates - Page 2
2023-10-12 06:21 GMT

150- பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் கூறும் போது, “பெண்கள், குழந்தைகள் உள்பட  150 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ளது. ஹமாசிடம் உள்ள பிணை கைதிகளை மீட்க உதவுவதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2023-10-12 06:00 GMT

போர் விதிகளை பின்பற்றுங்கள்- இஸ்ரேலுக்கு ஜோ பைடன் வலியுறுத்தல்

ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்க போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதனால், ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. வான்வழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் தரைவழி தாக்குதலையும் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்,  போர் விதிகளை பின்பற்றி  ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதலை  இஸ்ரேல் தொடர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

2023-10-12 04:48 GMT

ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப் பாதை கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு தெரியாமல் ஆயுதங்களை கொண்டு செல்ல இந்த சுரங்கப் பாதைகளை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்தனர். இதனால், சுரங்கப்பாதைகளை தகர்த்து ஹமாஸ் அமைப்பினரை பலவீனப்படுத்தும் வியூகத்துடன் இஸ்ரேல் தற்போது தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

2023-10-12 04:26 GMT

அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு இருந்தால் தங்கள்  பயண திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் காசா நகருக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்கும் படியும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

2023-10-12 04:17 GMT

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலுக்கும் ஆயத்தமாகி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை பூமியில் இருந்தே துடைத்தெறிவோம் என்று உறுதிபட கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்