இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 20 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு பயங்கரவாத தாக்குதல் நடத்தியது.

Update: 2023-12-11 09:57 GMT

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, பாலஸ்தீனத்தின் மேற்குகரையிலும் வன்முறை வெடித்துள்ளது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பிணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசாமுனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 ஆயிரத்து 997 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, மேற்குகரையில் நடந்த மோதலில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்