கொரோனாவுக்கு எதிரான போர்: 'எந்த நாட்டையும்விட சிறப்பாக செயல்பட்டது' - இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போரில் எந்த நாட்டையும்விட சிறப்பாக செயல்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-08-16 19:55 GMT

Image Courtacy: AFP

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில், இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் பிற எந்த நாடடையும் விட சிறப்பாக செயல்பட்டன என்று அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பாராட்டி உள்ளது.

இதுபற்றி வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசிஷ் ஜா குறிப்பிடுகையில், " இந்தியாவையும், அமெரிக்காவையும் விட தடுப்பூசி போடுவதற்கும், தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும், நன்கொடை அளித்து ஆதரவு அளிப்பதற்கும், தடுப்பூசி போட்டு உலக மக்களைப் பாதுகாப்பதற்கும் அதிகமாய் செய்த வேறு 2 நாடுகளைப் பற்றி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை"என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்