அமெரிக்காவில் மாயமான இந்திய என்ஜினீயரின் உடல் ஏரியில் மீட்பு

அவர் எப்படி மரணம் அடைந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-21 00:20 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரில் அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்தவர் இந்தியாவை பூர்விகமாக கொண்ட அங்கித் பாகாய் (வயது30). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கடந்த 9-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடுதிரும்பவில்லை. மாயமான அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

பல்வேறு இடங்களில் புகைப்படங்கள் ஒட்டி தேடியும் அவர் பலநாட்களாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் அங்குள்ள சர்ச்சில் ஏரியில் அவர் விழுந்திருக்கலாமா என்ற சந்தேகத்தின் பேரில், நீரில் தேடும் சோனார் கருவியின் உதவியுடன் தேடியபோது ஒரு வாலிபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது அங்கித் பாகாய் என்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் தற்கொலை செய்தாரா? எப்படி மரணம் அடைந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்