பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 27 பேர் பலி

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-07-05 23:40 GMT

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து நேற்று அதிகாலை சாண்டியாகொ டி யொசண்டு நகருக்கு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், அந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். ஒஹஸ்கா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் என்றபோது டிரைவரின் கடுட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்த்ல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்