நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 13 பேர் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காத்மாண்டு,
நேபாளத்தில் உள்ள கவ்ரேபலன்சோக் மாவட்டத்தில் மதம் சார்ந்த விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, மாலை 6.30 மணியளவில் சாலையில் விபத்திற்குள்ளானது. இந்த பேருந்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கவ்ரேபலன்சோக் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.