11 தமிழக மீனவர்கள் விடுதலை - ஒருவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-04-06 08:21 GMT

கொழும்பு,

கடந்த மாதம் 22-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்களின் விசைப்படகுகள் அந்நாட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்