ஓசூர்ஓம்சக்தி அம்மன் கோவிலில் கூழ் வார்த்து வழிபாடு

Update: 2023-08-05 19:30 GMT

ஓசூர்:

ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலில் பெண்கள் மட்டுமே பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆடி மாதத்தையொட்டி 39-ம் ஆண்டாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் மண் கலயத்தில் கூழ் ஊற்றி அதனை தலையில் சுமந்தவாறு கோவிலில் இருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர். மேலும் அம்மன் ரதமும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து கோவிலில் அம்மனுக்கு கூழ் வார்த்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்