தொழிலாளி தற்கொலை

தேனி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-14 13:07 GMT

தேனி அருகே கோடாங்கிபட்டி செல்லாயம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு சரிவர செல்ல முடியாமல் இருந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 12-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மகன் அழகுராஜா கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்