மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.

Update: 2023-09-17 18:56 GMT

பேக்கரி

அன்னவாசல் அருகே பூலாம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 63). இவர் பரம்பூரில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று கடையில் வேலை முடிந்து அங்கிருந்த கழிவு பொருட்களை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றிக்கொண்டு பரம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது தள்ளுவண்டிக்கு பின்னால் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நடராஜன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

பலி

இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை ெபற்று வந்த நடராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்