சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-02 18:51 GMT

தோகைமலை, 

தோகைமலை அருகே மேட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் தனியார் கல்குவாரியில் அரளை கல் உடைக்கும் கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் மாலையில் வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பச்சனம்பட்டி பிரிவு அருகே தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து செந்தில்குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செந்தில்குமார் மனைவி கல்பனா கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்