பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம்

தேனி அல்லிநகரத்தில் பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்

Update: 2023-07-10 18:45 GMT

தேனி அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் டிஜிட்டல் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பேனர் வைக்கும் இரும்பு சட்டம் மின்சார கம்பி மீது உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

அவருடைய உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்