வரதராஜ சாமி கோவில் குடமுழுக்கு

குத்தாலம் அருகே ஆனைமேலகரம் வரதராஜ சாமி கோவில் குடமுழுக்கு நடந்தது

Update: 2022-09-07 18:19 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே ஆனைமேலகரம் கிராமத்தில் பழமை வாய்ந்த வரதராஜ சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி காவிரி தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று 3-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்