தலைஞாயிறு பேரூராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தலைஞாயிறு பேரூராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Update: 2023-03-22 18:45 GMT

தலைஞாயிறு பேரூராட்சியில் வனநாளையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தி சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் கதிரவன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்