10 இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

10 இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-05-20 18:23 GMT

மதுரை, 

மதுரை நகரில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் 10 பேரை நேற்று திடீரென்று இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்-செல்லூர் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், மாடசாமி- தெப்பக்குளம் சட்டம்-ஒழுங்கு பிரிவு, முகமது இத்தீரிஸ்- கரிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவு, வசந்தா- கூடல்புதூர் சட்டம் ஒழுங்கு பிரிவு, மணிகண்டன்- தெப்பக்குளம் குற்றப்பிரிவு, பிளவர்சீலா- மத்திய குற்றப்பிரிவு, சரவணன்- திருநகர் குற்றப்பிரிவு, பிரியா- புதூர் குற்றப்பிரிவு, கீதா தேவி- நகர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், தன லட்சுமி-அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸ் நிலையத்துக்க இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்