டிராக்டர், வைக்கோல் கட்டும் எந்திரம் மாயம்

பூதலூர் அருகே டிராக்டர், வைக்கோல் கட்டும் எந்திரம் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-17 21:47 GMT

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது57). இவர் டிராக்டர் மற்றும் வைக்கோல் கட்டும் எந்திரங்கள் மூலம் பூதலூர் அருகே உள்ள கோட்டரப்பட்டி பகுதியில் வயலில் கிடைக்கும் வைக்கோல்களை கட்டுகளாக கட்டி கொடுக்கும் பணிகளை செய்து வந்தார். சம்பவத்தன்று மாலை பணிகளை முடித்துவிட்டு தனது டிராக்டரையும் வைக்கோல் கட்டும் எந்திரத்தையும் கோட்டரப்பட்டி மாதா கோவில் முன்பு நிறுத்திவிட்டு ஊருக்கு வந்து விட்டார். மறுநாள் காலை அங்கு சென்று பார்த்த போது டிராக்டர் மற்றும் வைக்கோல் கட்டி எந்திரத்தை காணவில்லை. இது குறித்து, பூதலூர் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்