செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது.

Update: 2023-07-21 01:17 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்