நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2022-07-31 20:04 GMT

கும்பகோணம்

கும்பகோணத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடிவருகின்றனர்.

10 பவுன் சங்கிலி பறிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மனைவி சந்திரா (வயது68). நேற்று காலை தனது பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் சந்திராவை பின் தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை பறித்தனர். அப்போது அவர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் சந்திரா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்