தமிழ்நாட்டில் இன்று 6 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-14 15:18 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3 பேருக்கும், சென்னை,செங்கல்பட்டு மற்றும் நீலகிரியில் தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மாநிலத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 6 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 47 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்