கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன், தலைவனாக மக்களுக்காக உழைப்பேன் - கமல்ஹாசன்

இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க என்று ம.நீ.ம. கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-09-21 16:48 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

என் உயிரும், உறவும், தமிழுமாகத் திகழ்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நானும், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றென்றும் களத்தில் போராடும்.

ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன். ஒரு தலைவனாக மக்களுக்காக உழைப்பேன்.

இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்