தமிழகத்தில் மேலும் 1,211 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 1,211- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-04 16:09 GMT

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 725 ஆண்கள், 486 பெண்கள் என மொத்தம் 1,211 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 268 பேர், கோவையில் 131 பேர், செங்கல்பட்டில் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 10 ஆயிரத்து 987 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 743 பேரும், கோவையில் 1,015 பேரும், செங்கல்பட்டில் 1,010 பேரும், சிகிச்சையில் இருக்கின்றனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்