திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-01 19:18 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் செல்லதுரை (வயது 23) நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் அரசூர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்லதுரையின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செல்ல துரையின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் உள்ளது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்து இருக்கலாம். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்கவில்லையெனில் செல்லதுரையின் உடலை வாங்க மாட்டோம் என கூறினர். அதற்கு செல்லதுரை இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தெரிவித்தார். அதனை ஏற்று உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்