மாட்டு தொழுவத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-08-19 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள நல்லகருப்பன்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 51). நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இதேபோல், நல்லகருப்பன்பட்டி வீராசாமி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் பாண்டியன். இவர், அசாமில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷோபனா. இவர், மாமனார், மாமியார் உடன் நல்லகருப்பன்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதனால் ஷோபனா வெளியே வந்து பாா்த்தபோது 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே குதித்து அங்கு நிறுத்தியிருந்த சைக்கிளை திருட முயன்றார். இவரை பார்த்ததும் மர்ம நபர் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்