வலை- மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணி மும்முரம்

வலை- மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணி மும்முரம்

Update: 2023-05-05 19:40 GMT

சேதுபாவாசத்திரத்தில் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் இனப்பெருக்கக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க ஆண்டு தோறும் தடை விதித்து வருகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி தடை காலம் தொடங்கியது. விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் ஆண்டுதோறும் தடைகாலம் தவிர்த்து இடைவெளியின்றி மீன்பிடித்தொழில் செய்வது வழக்கம். தவிர்க்க முடியாத காரணங்களால் வேலை நிறுத்தமோ, போராட்டங்களோ அறிவித்தால் தான் ஒருசில தினங்கள் மட்டும் மீன்பிடித்தொழில் தடைபடும்.

உபகரணங்களை சீரமைக்கும் பணி

இந்த நேரத்தில் படகுகளையோ, வலைகளையோ மற்றும் மற்ற உபகரணங்களையோ சீரமைப்பு செய்வது முடியாத காரியம். எனவே அரசு அறிவிக்கக்கூடிய தடைக்காலத்தை பயன்படுத்தி படகு, வலை மற்றும் உபகரணங்களை பழுது பார்ப்பது தான் வழக்கம்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 246 விசைப்படகுகள் இருந்தது. கஜா புயலின்போது சேதமடைந்தது போக தற்போது 146 விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடி தொழில் செய்து வருகிறது.

இதனால் தடைக்காலத்தை பயன்படுத்்தி சேதுபாவாசத்திரத்தில் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் பழைய வலைகளையும், மற்ற உபகரணங்களையும் சீரமைக்கும் பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்