தாய், தந்தையை தாக்கியமகனுக்கு வலைவீச்சு

தாய், தந்தையை தாக்கிய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-03-15 20:36 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி லெவஞ்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 70). கூலி தொழிலாளி. இவருடைய மகன் மாடசாமி. இருவரும் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். முருகனுக்கும், அவரது மகன் மாடசாமிக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகன் வீட்டில் உணவருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாடசாமி, முருகனை கம்பால் தாக்கினார். இதை பார்த்ததும் முருகனின் மனைவி தடுக்க வந்தார். அவரையும் மாடசாமி தாக்கினார். இதில் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாடசாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்