நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை, அடையாற்றில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2022-07-16 07:18 GMT

சென்னை,

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் 17-ம் தேதி நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏற்பட்ட மோதல் காரணமாக, தமிழக அரசு அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளது. இதனால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளது. முதலில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் அவர் வீடு அரசு இல்லம் என்பதால் கட்சி சார்ந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ஓட்டலில் நடைபெறுகிறது.

அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 62 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். அதிமுகவின் ஆதரவை பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு ஏற்கனவே நேரில் சந்தித்து கேட்டிருந்தநிலையில், அது தொடர்பாக விவாதிக்க நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்