ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.

Update: 2022-08-25 16:18 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.

மேலும், சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தையும் அவர் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளையும் வழங்கி உரையாற்றினார். அப்போது,

.கருணாநிதியின் மகனாக அல்லாமல் திமுகவின் நேர்மையான தொண்டனாக சிலையை திறந்து வைப்பதாகவும், 4 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் நான் திறந்து வைத்த மூன்றாவது வெண்கலச் சிலை இது என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்