கொத்தடிமையாக வேலை பார்த்த சிறுவன் மீட்டு நடவடிக்கை

கொத்தடிமையாக வேலை பார்த்த சிறுவன் மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-03-08 18:42 GMT

கரூர் அருகே செல்லாண்டி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 17 வயது சிறுவன் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை கிராம நிர்வாக அலுவலர் நாகமாணிக்கம் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, தொழிலாளர் நல உதவி ஆணையர், வருவாய் அலுவலர்கள் கொண்ட குழுவினர் அந்த நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். பின்னர் அங்கு வேலை பார்த்த 17 வயது சிறுவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்