தஞ்சை: ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி அண்ணன் பலி - தம்பி மாயம்...!

திருவோணம் அருகே ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி அண்ணன் பலியானார், தம்பியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-07-04 15:51 GMT

திருவோணம்,

திருச்சி மாவட்டம், தாராநல்லூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன்கள் தினேஷ் (வயது21), ராஜேஷ் (18) தினேஷ். இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தனர்.

பிறகு மதியம் 1.30 மணியளவில் ஊரணிபுரத்திலிருந்து கல்லணை கால்வாய் சைபன் பாலத்திற்கு குளிக்க சென்றனர். தினேஷ், ராஜேஷ் ஆகியோருடன் அவர்களது பெரியம்மா மகன்கள் திருக்குமரன், திருமாறன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

ஆற்றில் தினேஷ். ராஜேஷ், திருமாறன் ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். திருக்குமரன் மட்டும் கரையில் காத்திருந்துள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த 3 பேரும் தண்ணீர் சுழலில் சிக்கினர். திருமாறனை, திருக்குமரன் மீட்டுள்ளார். மற்ற இருவரை மீட்பதற்குள் அவர்கள் ஆற்று சுழலில் சிக்கியவாறு தண்ணீரில் மூழ்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தினேஷ்சை இறந்த நிலையில் சடலமாக மீட்டனர். மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ராஜேஷ்சை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்