கோவில் கும்பாபிஷேகம்

வெம்பக்கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-09-03 21:31 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த இனாம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழிஞ்சி அய்யனார் கோவில், அழகம்மாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக முதல் கால யாக பூஜை, 2-ம் கால யாக பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்