ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம்: "பிஞ்சு கை போச்சு.. "பச்சை பொய் சொல்ராங்க.. குழந்தையின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
குழந்தை கை இழந்த விவகாரத்தில், அரசு நிச்சயம் பதில் கூற வேண்டும் என குழந்தையின் தாயார் அஜிஷா கூறியுள்ளார்.
சென்னை,
ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் அஜிஷா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
"குழந்தை நன்றாக இருக்கலாம், ஆனால் கை நன்றாக இல்லையே.குழந்தையின் கை அழுகும் அளவிற்கு அதிக வீரியம் கொண்ட மருந்துகளை கொடுத்துள்ளனர். குழந்தை நன்றாக இருந்தால் மருந்து ஏன் எழுதி தர வேண்டும்.நான் சொன்னதால் தான் குழந்தையின கை அகற்றப்பட்டது என மருத்துவர்கள் பொய் சொல்கின்றனர்.
குழந்தையின் தலையில் நீர் இருப்பதாக மட்டுமே முதலில் கூறினார்கள். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே, ஆவணங்களில் கையெழுத்திட்டோம். குழந்தை கை இழந்த விவகாரத்தில், அரசு நிச்சயம் பதில் கூற வேண்டும்.
ஒன்றரை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினை திடீரென எப்படி வந்தது? நான் கையெழுத்து போட்டதால் அறுவை சிகிச்சை செய்ததாக மருத்துவர்கள் கூறுவது பொய் என்றார்.