கார் மோதி வாலிபர் சாவு

கார் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2023-03-26 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் கணேசன் (வயது32). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் இவர் தனது நண்பரை பார்க்க என்.புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த கார், இவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்