ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Update: 2023-03-05 18:50 GMT

அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் நம்பிராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாதம் பணிநீக்க காலத்தினை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். 3,500 அரசு தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். சத்துணவு மையங்களை மூடக்கூடாது. அரசு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை தடை செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்