டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து

பேட்டையில் டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2023-08-14 19:53 GMT

பேட்டை:

நெல்லை அருகே பேட்டை அசோகர் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் இளவரசன் (வயது 35). இவர் பேட்டை- கருங்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பெருமாள் கோவில் அருகே இளவரசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் கத்தி மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த இளவரசன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பன், அவரது மனைவி சுடலி, மகன்கள் மாதவன், சந்துரு ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் இளவரசனுக்கும், மாரியப்பன் குடும்பத்திற்கும் இடையே இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவரை கத்தியால் குத்தியதுடன், கம்பியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்