தமிழ்நாடே இனி எப்போதும் திமுக கோட்டைதான் - டி.ஆர்.பாலு அறிக்கை..!

அதிமுக கட்சி அதிகாரத்திற்கான தெருச்சண்டையை மறைக்க திமுக மீது பாய்கிறார் எடப்பாடி பழனிசாமி என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-07-16 07:16 GMT

சென்னை,

அதிமுக கட்சி அதிகாரத்திற்கான தெருச்சண்டையை மறைக்க திமுக மீது பாய்கிறார் எடப்பாடி பழனிசாமி என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

கட்சி அதிகாரத்திற்கான அவர்களின் இந்தத் தெருச்சண்டையை மறைக்க, தி.மு.க மீது பாய்கிறார் பழனிசாமி. தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்திற்குச் சென்றுவிட்டு, சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்றும், சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றதுபோல மற்ற மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தால் அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்திருக்கும் என்று பேசியிருக்கிறார்.

அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதே சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க .மண்ணைக் கவ்வியிருப்பதையும் மக்களின் பேராதரவுடன் சேலம் மாவட்டம் தி.மு.க. கோட்டையாகத் திகழ்வதையும் மறந்துவிட வேண்டாம். எப்படி மறக்க முடியும்? எடப்பாடி நகராட்சி உள்பட பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றிருப்பதைப் பழனிசாமியால் தூக்கத்திலும் மறக்க முடியாது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும் இனி எப்போதும் தி.மு.க. கோட்டைதான். என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்