தொழிலாளி திடீர் சாவு

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி திடீரென இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-01 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே செம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 40) தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் புதுக்கேணி பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரியில் கோழிகளை ஏற்றும் வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உத்திரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்