பாய், தலையணையுடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் காத்திருப்பு போராட்டம்

பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாய், தலையணையுடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-02 17:22 GMT

பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாய், தலையணையுடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாய், தலையணையுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்துதகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி இல்லாமல் இது போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறுகையில், ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலேயே வைக்காமல் பேக்கேஜ் முறையில் கலெக்டர் அலுவலகத்தில் விடப்படுகிறது. இதனால் ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும் திட்டப்பணிகள் தரம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்து அந்தந்த ஊராட்சிகள் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

தொடர்ந்து கலெக்டர் சாந்தி, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ய அரசால் மட்டுமே முடியும். டெண்டரை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்