குடிநீரைத் தேடி கிராமத்திற்குள் சுற்றிய புள்ளிமானை தெருநாய்கள் கடித்து குதறியது

குடிநீரைத் தேடி கிராமத்திற்குள் சுற்றிய புள்ளிமானை தெருநாய்கள் கடித்து குதறியதால், புள்ளிமானை மீட்டு அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Update: 2023-03-30 09:03 GMT

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எஸ்.வி.ஜி.புரம் கிராமம். இந்த கிராமத்தை ஒட்டி மலைப்பகுதி உள்ளது. இங்கு பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது.

இந்த நிலையில் காட்டில் குடிக்க தண்ணீர் கிடைக்காததால் சில சமயம் புள்ளி மான்கள் ஊருக்குள் வந்து தெரு நாய்களால் கடித்து குதறிவிட்டு இறந்து விடுகின்றன. 3 மாதத்திற்கு முன் இதேபோல் ஒரு புள்ளிமான் இந்த கிராமத்திற்கு குடிநீர் தேடி வந்த போது தெரு நாய்கள் கடித்து குதறியதால் மான் பரிதாபமாக இறந்தது.

அதேபோல் நேற்று முன்தினம் இரவு ஒரு புள்ளிமான் குடிநீரை தேடி எஸ்.வி.ஜி.புரம் கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கு இருந்த தெரு நாய்கள் அந்தப் புள்ளிமானை சூழ்ந்து கொண்டு கடித்து குதறியது.

இதில் படுகாயமடைந்த புள்ளிமானை மீட்டு அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனதுறையினர் அந்த புள்ளிமானை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த பகுதியில் கடந்த 3 மாதத்தில் இது 2-வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்