நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில மாநாடு

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில மாநாடு நடைபெற உள்ளது.

Update: 2022-05-25 17:44 GMT

பெரம்பலூர்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சங்கத்தின் 7-வது மாநில மாநாடு பெரம்பலூரில் அடுத்த மாதம் (ஜூன்) 25, 26-ந் தேதிகளில் பெரம்பலூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜூன் 25-ந் தேதி காலை சங்க பிரதிநிதிகள் மாநாடு தொடங்கி மறுநாள் மதியம் வரை நடைபெறுகிறது. ஜூன் 26-ந் தேதி மதியம் தமிழகம் முழுவதும் இருந்து வரும் 10 ஆயிரம் சாலைப்பணியாளர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலத்தில் ஈடுபடவுள்ளனர். அதனை தொடர்ந்து மாலையில் சங்க மாநில மாநாடு திறந்தவெளியில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்