குமரி மீனவர்கள் 9 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை
கன்னியாகுமரி மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு,
கன்னியாகுமரி மீனவர்கள் 9 பேர் மீன்பிடிக்க சென்றபோது திடீரென மிதவை கப்பல் பழுதானது. இதனால், மிதவை கப்பல் இலங்கையில் கரை ஒதுங்கியது.
மன்னார் மாவட்டம் நடுகுடா கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.