எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Update: 2022-07-21 04:23 GMT

கொழும்பு,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 6 மீனவர்களை கைது செய்து ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை உடனே தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்