வீரட்டானேஸ்வரர் கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

மாட்டு பொங்கலையொட்டி வீரட்டானேஸ்வரர் கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

Update: 2023-01-16 18:45 GMT

திருக்கோவிலூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடு தோறும் பொங்கல் படையலிட்டு சிறப்பாக வழிபாடு செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாட்டுபொங்கலையொட்டி திருக்கோவிலூர் கீழையூர் சிவானந்த வல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்