எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை

எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது.

Update: 2023-05-09 19:04 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, எம்.கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர் நந்தகுமார் 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவர் சக்தி 582 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், மாணவி திவ்யதர்ஷினி, மாணவர் ஆதிஷ் ஆகியோர் 580 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளார். கணிதத்தில் 4 பேர், வேதியியலில் 6 பேர், இயற்பியலில் ஒருவரும், உயிரியலில் ஒருவரும், கணினி அறிவியலில் 3 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளித்தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம், பள்ளியின் இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்