மகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-02-14 19:41 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், அவரின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 2.8.2021 அன்று வந்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து, மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.1,000 அபராதம் விதித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரைத்து உத்தரவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்