பேராசிரியர் மீது பாலியல் புகார்: கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாகா கமிட்டி விசாரணை

பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததால் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.

Update: 2022-08-31 19:34 GMT

திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் மீது எழுந்த பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி தரப்பில் விசாரணை நடத்தி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்த கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி விசாகா கமிட்டி அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் மேகலா தலைமையில் மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மற்றும் அதே துறையில் பணியாற்றும் சக பேராசிரியர்கள், புகார் அளித்த மாணவியுடன் படித்த மாணவ-மாணவிகள், கல்லூரி முதல்வர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையை கல்லூரி கல்வி இயக்குனரிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்