கருத்தரங்கம்

பெரம்பலூரில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-09-28 18:45 GMT

பெரம்பலூர் மாவட்டக்குழு இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்தது. கருத்தரங்கத்திற்கு மக்களுக்கான மருத்துவர் கழகத்தின் மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா மாவீரன் பகத்சிங் கண்ட கனவு என்ற தலைப்பிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் லெனின் தமிழக இளைஞர் இயக்க வரலாறு என்ற தலைப்பிலும் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்