தூக்குப்போட்டு பள்ளி மாணவர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே தூக்குப்போட்டு பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-18 18:06 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் ரகு (வயது 17). இவர் வெள்ளையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லாமல் பாதியில் படிப்பை ரகு நிறுத்தியதாக தெரிகிறது. இதை ராமமூர்த்தி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரகு அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்