பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-27 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி. இவர் பிளஸ்-1 தேர்ச்சி பெற்று பள்ளி கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை வரஞ்சரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்