100 பேருக்கு மரக்கன்றுகள்

கள்ளக்குறிச்சி அருகே 100 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-05-23 16:37 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி, உதவி வேளாண்மை இயக்குனர் (பொறுப்பு) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆறுமுகம், துணை தலைவர் அஞ்சலை முருகேசன், வேளாண்மை அலுவலர் சூர்யபிரகாஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்