ஒரேநாளில் 3 வீடுகளில் கொள்ளை

ராஜபாளையம் அருகே ஒரேநாளில் 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-11-05 19:30 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே ஒரேநாளில் 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

நகை கொள்ளை

ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆலங்குளத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள் கடை நடத்தி வருவதால், கடை அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அவரது வீடு திறந்திருந்ததை பார்த்த உறவினர்கள் ஆறுமுகத்திற்கு தகவல் அளித்தனர்.

அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை

மேலும் அதே தெருவில் வசிக்கும் ராஜபாளையம் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பரமகுரு என்பவரது வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்துள்ளனர். ஆனால் அதில் நகை மற்றும் பணம் இல்லை.

அதேபோல அதேபகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவரின் வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1,500-யை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்